ரூமுக்கு அழைத்த மேனேஜர்!! அடித்து துவைத்த நடிகை அமலா பால்..
அமலா பால்
நடிகை அமலா பால், தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். சிந்து சமவெளி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அமலா பால், இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில காரணத்தால் விவகாரத்தில் முடிந்தது.
அதன் பின் அமலா பால் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 2 ஆம் திருமணம் செய்து குழந்தையை சமீபத்தில் பெற்ற அமலா பால், ஒருசில படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் நடிகை அமலா பாலை ரூமுக்கு ஒரு மேனேஜர் அழைத்தது குறித்து நடிகர் விஷால் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
ரூமிற்கு வந்துவிடு
மலேசியாவில் நடந்த நிகழ்ச்சிக்கு அமலா பால் சென்றிருந்தார். அங்கு நிகழ்ச்சியின் மேனேஜர் அமலா பாலிடம் சென்று இரவு டின்னருக்கு ரூமிற்கு வந்துவிடு என்று மறைமுகமாக படுக்கைக்கு அழைத்திருக்கிறார்.
இதைக்கேட்டு கொந்தளித்த அமலா பால் மேனேஜரை அங்கேயே அடித்து துவைத்துள்ளார். பின் என்னை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியதும் கார்த்தியிடம் கூறி அந்த மேனேஜரை காவல்நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்தோம்.
அப்படி உடனடியாக நடவடிக்கைகள் இங்கு தேவை என்பதால் முதலில் யாராவது உங்களில் அப்படி தவறாக அணுகும் போது செருப்பை கழற்றி அடிக்க வேண்டும். புதிதாக திரைத்துறைக்கு வரும் பெண்கள் உங்களுக்கு அப்படி நடந்தால் உடனே என்னிடம் வந்து கூறுங்கள் என்று விஷால் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.