குஷ்பூவால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது!! 24 ஆண்டுக்கு பின் ரகசியத்தை உடைத்த கணவர் சுந்தர் சி...
தமிழ் சினிமாவில் டாப் இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சுந்தர் சி, நடிகை குஷ்பூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு பெண்குழந்தைகளை பெற்று வளர்ந்து வந்த குஷ்பூ, தற்போது நடிப்பு, அரசியல் என்று கவனம் செலுத்தி வருகிறார்.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 2 படம் உருவாகி வரும் மே 3 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்காக பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் பேட்டியளித்தும் வருகிறார் சுந்தர் சி.
சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியொன்றில் குஷ்பூ பற்றிய ரகசியத்தை முதன்முறையாக கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். திருமணத்திற்கு முன் ஒரு மருத்துவர் குஷ்பூவிடம், உங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார்.
இதனை கேட்டதும் என்னிடம் அழுது கண்ணீர் விட்டார். பின் என்னிடம் குஷ்பூ வந்து, நீங்க வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளுங்கள், என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். அந்த சமயத்தில் அதே மனநிலையில் இருந்தோம். அதன்பின் கடவுள் ஆசீர்வாதத்துடன் இரு குழந்தைகள் பிறந்தது.