ரஜினி, தனுஷ் வீட்டிலும் திருட்டா? ஐஸ்வர்யா பக்கம் திரும்பும் விசாரணை
Dhanush
Aishwarya Rajinikanth
By Dhiviyarajan
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா வீட்டில் சமீபத்தில் 60 சவரன் நகை திருட்டு போனதாக போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் ஐஸ்வர்யாவின் வீட்டில் வேலை ஈஸ்வரி, வெங்கடேஷ் இருவரையும் கைது செய்தனர்.
இவர்களை விசாரித்த பின்பு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அது என்னவென்றால் ஐஸ்வர்யா 60 சவரன் நகை தான் திருட்டு போனதாக புகார் அளித்தார், ஆனால் விசாரணையில் 100 சவரன் நகை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கைதானவர்கள் தனுஷ் வீட்டிலும் வேளைக்கு அடிக்கடி சென்று வந்ததாக சொல்லப்படுகிறது, அதனால் தற்போது போலீசார் ஐஸ்வர்யா மற்றும் ரஜினியை விசாரணை செய்து வருகின்றனர்.