ஐஸ்வர்யா ராய் ஃபாலோ செய்யும் ஒரே நபர்.. விவாகரத்து கேள்விக்கு கிடைத்த பதில்
ஐஸ்வர்யா ராய்
இந்தியாவிலிருந்து உலக அழகி என்ற பட்டத்தை வென்றவர்கள் பலர் ஆனால் இன்றும் உலக அழகி என்ற பெயரை கேட்கும்போது மனதில் முதலில் தோன்றும் பெயர் என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான்.
இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் கொள்ளை கொள்ளும் அழகால் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
சமீபகாலாமாக ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை இருவரும் விவாகரத்து பெறப்போகிறார்கள் என பல விதமான வதந்திகள் உலா வருகிறது.
ஆனால், அந்த வதந்திகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சில நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டு வந்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானியின் திருமணத்திலும் குடும்பத்தோடு கலந்துகொண்டார் ஐஸ்வர்யா ராய்.
தற்போது, மீண்டும் இந்த வதந்தி பரவ தொடங்கியது அதற்கு முக்கிய காரணம் சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் அவரது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால் அபிஷேக் பச்சனோ, அமிதாப் பச்சனோ ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
ஒரே நபர்
இவ்வாறு காரணம் தேடி வதந்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், ஐஸ்வர்யா ராயின் இன்ஸ்டா பக்கத்தை பார்த்து தற்போது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அதாவது, ஐஸ்வர்யாவுக்கு 14 மில்லியன் வரை ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள். ஆனால் அவர் ஃபாலோ செய்யும் ஒரே ஒருவர் அவரது கணவர் அபிஷேக் பச்சனை மட்டும்தான். தற்போது இந்த விஷயம் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.