விவாகரத்து பேச்சுக்கு முற்றுப்புள்ளி.. ஐஸ்வர்யா ராய் செஞ்சிருக்க விஷயத்தை பாருங்க
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக்
தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை உலக அழகி என்றால் அது எப்போதுமே ஐஸ்வர்யா ராய் தான், உலக அழகி என்ற பட்டத்தை வென்ற இவர் இன்றும் மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளார்.
இந்த ஜோடி விவாகரத்து பெற்று பிரியப்போவதாக அடிக்கடி இணையத்தில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அதற்கு காரணம் ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் இருவரும் சமீபத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் சேர்ந்து கலந்து கொள்ளாமல் தனித்தனியாக கலந்து கொண்டது தான்.
முற்றுப்புள்ளி
இந்நிலையில், மும்பையில் நடந்த பிரம்மாண்டமான விருந்து நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராய் அவரது கணவர் அபிஷேக் மற்றும் தாயார் பிரிந்யா ஆகியோருடன் இணைந்து ஒன்றாக கலந்து கொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில், மூன்று பேரும் மகிழ்ச்சியாக இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை தயாரிப்பாளர் அனு அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் விவகாரத்து பெற உள்ளார்கள் என்று வரப்பட்ட செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.