மகள் ஆரத்யாவுக்கு லிப்லாக்.. புகைப்படம் எடுத்து வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா ராய்..
1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வாகிய பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இதன்பின் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக இயக்குனர் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டார் ஐஸ்வர்யா.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றும் பல கோடி சம்பளம் வாங்கும் நடிகையாக மாறினார். கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ஒருசில படங்களில் நடித்தும் வந்தார்.

அதன்பின் ஆரத்யா பச்சன் என்ற மகளை பெற்றெடுத்த ஐஸ்வர்யா சினிமாவில் இருந்து சற்று விலகினார். பின் குழந்தை பார்த்துக்கொண்ட ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
இதன்பின் மணிரத்னம் இயக்கி சமீபத்தில் வெளியாகி 500 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்து புகழ் பெற்றார்.

பின் குடும்பத்தினை பார்த்து வந்த ஐஸ்வர்யா ராய், ஒரே மகளான ஆரத்யாவின் 11 வது பிறந்த நாள் இன்று கொண்டாடியிருக்கிறார்.
மகள் ஆரத்யாவுக்கு உதட்டி ஆசையாக முத்தம் கொடுத்த செல்ஃபி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.