என்னையும் ஐஸ்-வரியானு கூப்பிட்டான்? பிரபல நடிகை ஐஸ்வர்யாவையும் விட்டுவைக்காத பத்திரிகையாளர்!!

Aishwarya Bayilvan Ranganathan
By Edward Jun 14, 2022 02:20 PM GMT
Edward

Edward

Report

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க விசயங்களை கூறி பிரபலமாகிவிடலாம் என்று சிலர் சுற்றித்திரிந்து வருகிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் நடிகராகவும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றிய பயில்வான் ரங்கநாதன் சமீபகாலமாக கேவளமாக நடந்து கொள்கிறார் என்று புகார்கள் எழுந்து வருகிறது.

எல்லைமீறும் பயில்வான்:-

நட்சத்திரங்கள் மற்றும் ஆரசியல் சார்ந்தவர்களின் குறிப்பாக நடிகைகளை பற்றி படுமோசமான வார்த்தையை பயன்படுத்தி கொச்சைப்படுத்தி வருவதாக பல நட்சத்திரங்கள் விமர்சித்தும் மேடைகளில் கண்டித்தும் வருகிறார்கள்.

மிரட்டும் நடிகைகள்:-

அப்படி சமீபத்தில் நடிகை ராதிகா பீச் டோட்டில் கூட பயில்வானை கண்டித்து அடித்து சென்றுள்ளார் என்ற செய்தியும் வெளியாகியது. இவரை தொடர்ந்து சமுக ஆர்வலர்களான இரு பெண்கள் பயில்வானுக்கு எதிராக வழக்கும் போட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து பின்னணி பாடகி சுசித்ரா பயில்வானுக்கு கால் செய்து சரமாறியாக கேள்வி கேட்ட ஆடியோவும் வைரலானது. இதையும் கண்டுகொள்ளாத பயில்வான் நடிகைகளை பற்றி திரும்பவும் இணையங்களில் பேச பேட்டிக்கொடுத்து வருகிறார்.

ஐஸ்வர்யா பதிலடி:-

தற்போது 80களில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகை லட்சுமியின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா பாஸ்கர் பயில்வான் பற்றி பேசியுள்ள செய்தி பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பேட்டியொன்றில் பயில்வான் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஐஸ்வர்யா, பப்ளிக் பீஃல்டுக்குள் வந்துவிட்டாலா நல்லது கேட்டது என்று இரண்டுக்கும் தயாராகிக்கொள்ள வேண்டும். அவர் ஒரு ரிப்போர்ட்டர். அவரிடம் எது கிடைத்தாலும் அப்படி தான் பேசுவார்.

ஐஸ்வர்யாவையும் விட்டுவைக்காத பயில்வான்:-

இதேபோல் ஒருமுறை ராமராஜன் சார்படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது பவாடை தாவணியில் சாதாரண நடுத்தரக்குடும்பத்து பெண் போல் கீழே குணிந்து நடந்து கொண்டிருக்கும் போது கூட்டத்தில் ஒரு குரல் ஐஸ் - வரியா? என்று கேட்டார்.

இப்படி ஒரு சாதாராண நடுத்தரக்குடும்பத்தில் இருக்கிற பெண் ஒரு சிம்பிளான புடவை கட்டிக்கொண்டு போனாலும் இப்படி பேசுவது தான் இயல்பு. இதை எல்லாத்தையும் கையில் எடுத்துக்கொண்டா நம்முடைய வாழ்க்கை தான் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசுபவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். அதற்காக மாத்திரை வாங்கி போட்டு சூசை பண்ணிக்கொள்வதா? இதையெல்லாம் மனதில் போட்டுக்கொள்ளக்கூடாது உதறித்தள்ளிவிட்டு வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.