தனுஷுடன் விவாகரத்துக்கு பின் மகன்களை கண்டுகொள்ளாமல் பார்ட்டிக்கு செல்லும் ஐஸ்வர்யா.. கவலையில் ரஜினிகாந்த்
divorce
dhanush
rajinikanth
aiswarya dhanush
By Kathick
கடந்த மாதம் திரையுலகினர் உட்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம், தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து விஷயம் தான்.
இருவரின் பிரிவை தாங்காத ரஜினிகாந்த், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரையும் மீண்டும் இணைந்துவைக்க தன்னால் முடிந்த பல முயற்சிகளை செய்து வருகிறார்.
தனது மகளிடம், உன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை விட, உன்னுடைய சொந்த விருப்பம் தான் முக்கியமா என்று கண்டிப்பாக பேசியுள்ளார்.
மேலும், விவாகரத்து தான் ஒரே முடிவு என்று நினைத்த ஐஸ்வர்யா தற்போது சொத்து பிரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், தந்தையின் பேச்சை கேட்காமல், தனது மகன்கள் இருவரையும் கண்டுகொள்ளாமல் பார்ட்டிக்கு செல்வது, வீட்டில் இல்லாமல் வேறொரு பிடித்த இடத்தில் தங்குவது என்று பல செயல்களில் ஈடுபட்டு வருகிறான் ஐஸ்வர்யா.