என்ன சினிமாவை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு குட் பை? அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக்
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் அஜித். பல கோடி ரசிகர்களை சம்பாதித்த இவர் தற்போது லைகா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்தடுத்து குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் மற்றும் அந்த படத்தில் அஜித்தின் லுக் என தொடர்ந்து அந்த படம் குறித்த தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடிப்பு மட்டுமின்றி அடுத்த ஆண்டு ஐந்ரோப்பாவில் நடைபெறவுள்ள ஜி.டி.4 கார் பந்தையத்தில் கலந்து கொள்ள அபுதாபியில் தீவிர பயிற்சி மேற்கொண்டும் வருகின்றார்.
அதிர்ச்சி தகவல்
இந்நிலையில், பிரபல சினிமா பத்திரிகையாளர்களான அந்தணன் மற்றும் பிஸ்மி அஜித் குமார் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அதில், "அஜித்குமார் விரைவில் லண்டனில் செட்டில் ஆக போகின்றார்.
ஏற்கனவே அங்கு ஒரு இடம் வாங்கி உள்ளார். இந்த இடம் வாங்கிய விஷயத்தில் அவருக்கு லைகா நிறுவனம் உதவியாக இருந்துள்ளது. அதை தொடர்ந்து துபாயில் இரண்டு வீடு வாங்கி வைத்துள்ளார்.
அதனால் அவர் விரைவில் லண்டன் சென்று செட்டில் ஆக உள்ளார்" என கூறியுள்ளனர். தற்போது இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையும் அப்போது விரைவில் அஜித்தும் சினிமாவை விட்டு விலகி விடுவாரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.