இந்த அளவிற்கு இறங்கிட்டாரே? திருச்சியை அதிரவைத்த அஜித்குமார்.. என்ன ஒரு பப்ளிசிட்டி..

Ajith Kumar Vijay
By Edward Jul 28, 2022 08:10 AM GMT
Report

பெரும்பாலும் நடிகர் அஜித் குமார் பப்ளிசிட்டியோ, பிரமோஷனையோ விரும்பாதவராக இருந்து வருபவர். குறிப்பிட்ட காலத்திற்கு பின் அஜித் அனைத்து விசயங்களில் இருந்தும் ஒதுங்கி இருக்கிறார் என்ற விமர்சனத்தையும் பெற்று வருகிறார்.

அப்படி வலிமை படத்திற்கு பிறகு அவர் எங்கு சென்றாலும் ரசிகர்களை பார்த்தும் புகைப்படங்களையும் எடுத்து வருகிறார். சமீபத்தில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள திருச்சிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சென்ற இடமெல்லாம் ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடிவிட்டனர்.

அவர்களுக்காக மொட்டை மாடியில் நின்று கையசைத்து ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்தார். இதனை அடுத்து கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தனக்காக காத்திருந்த பெண்மணியை அவரே கூப்பிட்டு நலம் விசாரித்து புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டார்.

இதனை சிலர் கலாய்த்தும் பப்ளிசிட்டிக்காக இதை செய்கிறார் என்றும் விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGallery