30 நாளுக்கு நடிக்காமலே சம்பளம் கொடுத்த அஜித்!! நடிகை சிங்கம்புலி ஓபன் டாக்..
சிங்கம்புலி
தமிழ் சினிமாவில் இயக்குநர், கதையாசிரியர், நடிகர் என்று பன்முகத்திறமை மூலம் பிரபலமாக சிங்கம்புலி, தற்போது குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தாய் கிழவி படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சமீபத்தில் சிங்கம் புலி அளித்த பேட்டியொன்றில், அஜித் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
நடிக்காமலே சம்பளம்
அதில், பில்லா 2 படம் எடுத்துக்கொண்டிருந்தபோது அஜித் சார் என்னை கோவாவுக்கு வரவைத்து 30 நாட்கள் தன்னுடன் வைத்திருந்தார். அதன்பின் எந்தக்காட்சியிலும் நடிக்காத எனக்கே சம்பளம் கொடுத்து அனுப்பினார்.

அப்போது நான், இந்த படத்தில் நன் நடிக்கவே இல்லையே, எனக்கு எதற்கு பணம் என்று கேட்டேன், அதற்கு அஜித் சார், நீ 4, 5 படங்களை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறாயே என்று சொன்னார். அதனால் தான் அந்த பணத்தை வாங்கிக்கொண்டேன்.
பின் அடுத்த படத்திற்கும் என்னை கூட்டிக்கொண்டு போகிறீர்களா என்று நான் ஜாலியாக கேட்டபோது, என்னய்ய இப்படி ஆரம்பிச்சிட்ட என்று அஜித் சார் நகைச்சுவையாக பதிலளித்ததாக சிங்கம் புலி தெரிவித்துள்ளார்.