அஜித்தே வலியசென்று வாய்ப்பு கொடுத்தும் கைநழுவவிட்டு புலம்பும் தயாரிப்பாளர்! இவரா என்று கிண்டலடிக்கும் ரசிகர்கள்..
கோவையில் கணவரை கொலை செய்துவிட்டு, தனியாக இருந்த மனைவிக்கு தொந்தரவு கொடுக்க நினைத்த மர்மநபர்களை அக்கம்பக்கத்தினர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவூர் கோடங்கிபாளையத்தில் அரசுக்கு சொந்தமான காந்தி பண்ணையில் செல்வராஸ் என்பவர் காவலாளியாக இருந்து வந்துள்ளார்.
செல்வராஜ் இரவு 10 மணியளவில் பண்ணையின் கேட்டை அடைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இவரது மனைவி சித்ரா அங்குள்ள வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது செல்போனுக்கு மனைவி சித்ரா தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் போனை அவர் எடுக்கவில்லையாம். இந்நிலையில் அன்று சித்ராவின் வீட்டில் வழக்கத்திற்கு மாறாக கதவைத் தட்டும் சத்தம் கேட்டுள்ளது. கணவர் என்றால் அவரது பெயரை சொல்லி அழைப்பது வழக்கமாம். இதனால் சந்தேகமடைந்த சித்ரா பக்கத்து வீட்டினருக்கு போன் செய்து கூறியுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் வந்த நிலையில், வீட்டில் கதவைத் தட்டிக்கொண்டிருந்த 2 மர்மநபர்கள் எஸ்கேப் ஆகியுள்ளனர்.
அவர் தொடர்ந்து அவர்கள் துரத்தியபோது, பண்ணையின் கேட் அருகே ரத்த வெள்ளத்தில் செல்வராஜ் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.