நயன்தாராவா வேண்டவே வேண்டாம்!! 8 ஆண்டுகளாக அவமானப்படுத்தியதால் ஒதுக்கி வரும் வாரிசு நடிகர்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அப்படி சில ஆண்டுகளுக்கு முன் நானும் ரவுடி தான் படத்திற்கான சைமா விருதுகள் விழாவில் சிறந்த நடிகை விருதினை வாங்கினார். விருதினை வழங்க நடிகை ஸ்ரீபிரியா மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் மேடைக்கு வந்துள்ளனர்.
விருது வாங்குவதற்கு முன் தன் கணவர் விக்னேஷ் சிவனை பாராட்டிய பின் அவர் கையில் விருதினை வாங்க ஆசைப்படுவதாக கூறினார். அதன்பின் மேடைக்கு வந்த விக்னேஷ் சிவனிடம் அல்லு அர்ஜுன் அந்த விருதினை கொடுத்திருக்கிறார். கணவரிடம் விருதினை வாங்கிய மகிழ்ச்சியில் நயன் தாராவும் சென்றிருக்கிறார்.
இந்த சம்பவம் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி மரியாதையே தெரியாதா நயன் தாரா என்று திட்டி வந்தனர். அதன்பின் தன்னை இப்படி நடத்திய நயன் தாரா மீது அல்லு அர்ஜுன் கோபத்தில் இருப்பதாகவும் அதனால் தான் நடிகை நயன் தாராவுடன் ஜோடியாக நடிக்கக்கூடாது என்று 8 ஆண்டுகளாக அவரை ஒதுக்கி வருகிறாராம்.
சமீபத்தில் கூட ஒரு படத்தில் நயன்தாரா பெயர் அடிபட அவர் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று கண்டீசன் போட்டிருக்கிறார். அதன்பின் வேறொரு நடிகையை கமிட் செய்து நடிக்க வைத்திருக்கிறார்களாம். அதன்பின் மலையாள படமான பாஸ்கர் தி ராஸ்கல் படத்திற்கான சிறந்த நடிகைக்கான விருதினை வாங்கினார். அந்த விருதினை நடிகர் அல்லு அர்ஜுன் தான் கொடுத்திருக்கிறார்.
You May Like This Video