இதே வேலையாவே இருக்காங்களே.. இரண்டாம் கர்ப்பத்தால் சீரியலில் விலகினாரா ஆலியா!
பிரபல தொலைக்காட்சி தொடர்களில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் ராஜா ராணி. சஞ்சீவ், ஆலியா மானசா அறிமுகமாகிய இந்த சீரியலில் ஜோடியாக நடித்து திருமணம் செய்து ரியல் ஜோடியாகினர். திருமணமாகி கர்ப்பமான ஆலியா முதல் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
அப்போதே நடிப்பதில் இருந்து விலகுகிறார் ஆலியா என்று செய்திகள் வெளியாகியது. இதையெல்லாம் உடைத்து மீண்டும் உடலை இறக்கி ராஜா ராணி 2 சீனனில் நடித்து வருகிறார்.
சித்துவுடன் நடித்து வரும் இந்த சீரியலின் போது ஆல்யா இரண்டாம் முறையாக கர்ப்பமாகியுள்ளார். 7 மாத கர்ப்பகாலத்தில் இருக்கும் ஆலியா இதனால் சீரியலில் இருந்து விலகிவிடுவார் என்று பலர் செய்திகளை வெளியிட்டு வைரலாக்கினர்.
ஆனால் அதெல்லாம் இல்லை என்று சமுகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் ஆலியா மானசா. சீரியலில் இருந்து விலகும் ஐடியா இல்லை. ஒரே ஒரு சந்தியா தான் அது இந்த ஆலியா மட்டும் தான் என்று கூறியுள்ளார்.

