எனக்கு மட்டும் ஏன் இது போன்ற பாய் ஃப்ரெண்ட்ஸ்.. காதல் குறித்து அமலா பால் உடைத்த விஷயம்
அமலா பால்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
பின் விஜய்யுடன் இணைந்து தலைவா, தனுஷுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஆடு ஜீவிதம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின் இரண்டாவதாக ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சமீபத்தில் ஒரு மகன் பிறந்தார்.
ஓபன் டாக்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் அமலா பால் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், "கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி பாய் ஃப்ரெண்ட்ஸ் அனுப்புறீர்கள். நான் எவ்வளவு ஸ்வீட்டான பெண். நான் எல்லோரையும் சர்ப்ரைஸ் செய்கிறேன். இவ்வளவு லவ் பண்றேன்.
எனக்கு மட்டும் ஏன் காதலில் இது போன்று நடக்கிறது, என புகார் செய்தேன். என்னை சர்ப்ரைஸ் செய்யும், என்னை டேட்டுக்கு அழைத்து செல்லும் பாய் ஃப்ரெண்ட் வேண்டுமென்று நான் கடவுளிடம் கேட்பேன். அதற்கு பிறகுதான் ஜகத் தேசாயை கடவுள் அனுப்பினார்" என்று தெரிவித்துள்ளார்.