வடிவேலு பாலாஜி நிலைதான் எனக்கும் நடந்தது! புலம்பும் தொலைக்காட்சி பிரபலம்..

television kpy tamilactor vaduvelubalaji amuthavanan
By Edward Sep 25, 2021 04:59 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் காமெடி பாவணைகொண்டு மக்களை சிரிக்க வைக்கும் நடிகர்கள் பலர் வளர்ந்து வருகிறார்கள். அதில் ஒருவராக தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி மன அழுத்தத்தால் மரணமடைந்தவர் வடிவேலு பாலாஜி. பல கலைஞர்கள் உருவாக காரணமாக இருந்து வந்த வடிவேலு பாலாஜிக்கு நடந்தது தான் எனக்கு நடந்துள்ளது என்று நடிகர் அமுதவாணன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஒரு காலகட்டத்தில் சினிமாவிற்கும் டிவிக்கும் டேட் கொடுக்க முடியாமல், டைம் மேனேஜ்மென்ட் செய்யத் தவறியதால் தான் நிறையப் பிரச்சினைகள் எனக்கும் வந்தது. அதிலிருந்து வெளியே வரவும் முன்னேறவும் தன்னால் முடியவில்லை என்று எமோஷனலாக பேசியுள்ளார். சினிமாவை பொறுத்தவரையில், அங்கு ஒரு பெரிய அரசியலே நடந்து கொண்டிருக்கிறது.

சின்ன சின்ன நடிகர்கள் எளிதில் வளர்ந்து விடக்கூடாது என்பதே சிலருடைய குறிக்கோளாக உள்ளது. இதுதான் வடிவேல் பாலாஜி நடந்துள்ளது. வடிவேல் பாலாஜி இறப்பிற்கு முக்கிய காரணம் டிப்ரஷன் தான் என்றும், தானும் அதே பிரச்சினையை சந்தித்தேன் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சினிமாவில் நினைத்த இடத்திற்கு செல்ல முடியாததால் மனம் வெறுத்து பல வருடங்களாக தற்கொலை செய்து கொள்ள அடிக்கடி தூண்டுகிறது.

அப்போதெல்லாம் இன்று ஒரு நாள் போகட்டும், ஒரு வாரம் போகட்டும், ஒரு மாதம் பார்ப்போம் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.

வீடியோ..