41 வயதில் 3வது குழந்தைக்கு ஆசைப்படும் புஷ்பா 2 பட நடிகை.. காரணம் இதானாம்..
அனசுயா பரத்வாஜ்
தெலுங்கு சினிமாத்துறையில் முக்கிய படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை அனசுயா பரத்வாஜ். சமீபத்தில் ரிலீஸான புஷ்பா 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் அனசுயா. தொகுப்பாளினியாக பணியாற்றி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அனசுயா, கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஆடை பற்றி விஷயங்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். கவர்ச்சி ஆடை அணிவது பற்றிய விமர்சனங்கள் எழுந்தபோது எனக்கு பிடித்திருக்கிறது நான் போடுகிறேன் என்றபடி பதிலடி கொடுத்தார். தற்போது 41 வயதாகும் அனசுயாவுக்கு இரு ஆண் குழந்தைகள் இருக்கிறது. மூன்றாவது குழந்தை மீதான ஆசை பற்றி பகிர்ந்திருக்கிறார் அனசுயா.
பெண் குழந்தைக்கு ஆசை
ஆண் குழந்தையைவிட பெண் குழந்தைகள் தான் எனக்கு பிடிக்கும் என்றும் முதல் குழந்தையே தனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் ஆண் குழந்தை பிறந்தது, இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் போதும் பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டேன், அப்போதும் ஆண் குழந்தை பிறந்ததால் ஏமாற்றமே மிஞ்சியது.
பெண் குழந்தை மீதான ஆசை காரணமாகவே, 3வது குழந்தையை பெற்றெடுக்க தயாராக இருபதாகவும் அனசுயா காரணத்தை கூறியிருக்கிறார்.
சினிமாத்துறையில் இருக்கும் பல பெண்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் போது அனசுயா குழந்தை பெற்றுக்கொள்ள, அதுவும் 41 வயதில் இப்படியொரு ஆசை இருப்பதை பலரும் ஆச்சரியத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.