பாடகரால் கண்ணீர் விட்டு கதறி அழுத தொகுப்பாளினி டிடி!! வைரலாகும் வீடியோ..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. கடந்த 2014ல் அவரது நண்பரும் தொழிலதிபருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்தார்.
ஆனால் திருமணமாகி 3 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பின் படங்களில் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வரும் டிடி தனியாக யூடியூப் சேனல் ஆரம்பித்து சில விசயங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் டிடி விரைவில் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார் என்ற தகவல் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. அந்தவகையில் தற்போது குடும்ப நண்பரான கேரளாவை சேர்ந்த ஒருவரை திவ்யதர்ஷினி திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவெடுத்திருக்கிறார்களாம்.
ஆனால் இது உண்மையில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் பாடகர் பிரதீப் குமார் கச்சேரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடி, அவர் தல கோதும் என்ற ஜெய் பீம் படத்தின் பாடலை பாடி இருக்கிறார்.
அப்போது டிடி பிரதீப் பாடிய போது கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். குறித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. டிடியின் அந்த ரியாக்ஷனை நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.
Pradeep singing this priceless song in Super Singer Finale ft Chithra Ma’s cute clapping ??? pic.twitter.com/qg3skGPpcb
— Priya ? (@Padackled) December 10, 2023