அப்படியொரு உறவே எனக்கு தேவையில்ல!! ரிலேஷன்ஷிப் பற்றி உண்மையை கூறிய அஞ்சலி..
தமிழில் சினிமாவில் அங்காடி தெரு படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அஞ்சலி நடிகர் ஜெய்யிடம் காதலில் இருந்து வந்தார். சில காரணங்களால் ஜெய் பக்கமே போகாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் லிப்லாக் சீன் அல்லது நெருக்கமாக சீனில் எது டஃப் அல்லது முகம் சுளிக்க வைக்கிறது என்ற கேள்விக்கு நெருக்கமான சீன் என்று கூறியிருக்கிறார் அஞ்சலி. நெருக்கமான காட்சின்னா எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம்.
சில நேரங்களில் கேரவனில் போய் அழுதுட்டு வந்ததெல்லாம் நடந்திருக்கு. லிப்லாக்-னா இதுக்கு மேல போகும்றது நமக்கு தெரியும் என்று கூறியிருந்தார்.
மேலும், ரிலேஷன்ஷிப் பற்றிய கேள்விக்கு அதற்கு ரொம்ப முக்கியமான ரெஸ்பெக்ட். அதற்கு பிறகு தான் லவ், அன்பெல்லாம். அது இல்லை என்றால் அப்படிப்பட்ட ரிலேஷன்ஷிப்பே எனக்கு தேவையில்லை என்பது நான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார் அஞ்சலி.