முதல் மாநாட்டில் தளபதி விஜய்யின் ஹைப்பர் பேச்சு.. 96க்கு சிக்கல் வருமோ என புலம்பும் ரசிகர்கள்...
தளபதி விஜய்
தவெக தலைவர் தளபதி விஜய் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி கட்சியின் முதல் மாநாட்டினை விக்கிரவாண்டி வி சாலையில் பிரம்மாண்ட முறையில் நடத்திமுடித்தார்.
பல கோடி செலவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டு தளபதி பேசியதை கொண்டாடினார்கள் என்று கூறப்பட்டது.
மாநாட்டில் முதன்முதலாக பேசிய விஜய், கொள்கைகள் முதல் 2026 தேர்தல் வரையிலான நடவடிக்கைகள் குறித்து விஜய் காரசாரமாக பேசியிருந்தார்.
இதற்கு பலரும் ஆதவளித்த நிலையில் பலர் விஜய்யின் பேச்சை விமர்சித்தும் கலாய்த்தும் வருகிறார்கள்.
தளபதி69
இந்நிலையில், மாநாட்டில் மத்தியில் ஆளும் கட்சியையும் மாநிலத்தில் ஆளும் கட்சியையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார் விஜய். அவரின் சரவெடி பேச்சை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
அப்படியொரு சூழல் இருக்க ரசிகர்களுக்கு புது கவலை ஒன்று உருவாகியுள்ளது. அதாவது இன்னும் ஒரு படத்தில் மட்டும்தான் விஜய் நடிக்கவுள்ளார்.
அதனால் தளபதி69 படத்திற்கு சிக்கல் வருமோ என்று பேச ஆரம்பித்தும் என்ன நடக்கப்போகிறதோ என்று புலம்பி இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.