கோபத்தில் கத்திய இயக்குனர்!! காசு அதுக்குதான் கொடுக்கிறீங்கன்னு, ஆஸ்கர் விருதை தட்டித்தூக்கிய ஏ ஆர் ரகுமான்..
இந்திய சினிமாவின் இசைபுயலாக திகழ்ந்து வரும் ஏ ஆர் ரகுமான், யாருக்கும் சிரமம் தராமல் நல்ல பெயரை எடுத்து வைத்து வருகிறார். ஆனால், ஒரு படத்திற்கான இசையை கொடுக்க தாமதப்படுத்துகிறார் ஏ ஆர் ரகுமான் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தது. அப்படி பிரபல இயக்குனர் சுபாஷ் கய்-க்கு ஏ ஆர் ரகுமான் செய்த ஒரு செயலை பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.
சுபாஷ் கய் மற்றும் ரகுமான் இணைந்து பணியாற்றிய யுவராஜ் படத்திற்கான இசையை கொடுப்பதில் மிகவும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கோபத்தில் இருந்த இயக்குனர் சுபாஷ் கய், எப்படி தாமதிக்கலாம், என்னுடைய கால்ஷீட் உள்ளது, ஹீரோ சல்மான் கானின் கால்ஷீட் இருக்கிறது. நீங்கள் ஏன் இதுவரை இசையை கொடுக்கவில்லை என்று ஏ ஆர் ரகுமானிடம் கடிதம் ஒன்றினை எழுத்தி அனுப்பி இருக்கிறார்.
அதற்கு ஏ ஆர் ரகுமான், நான் தற்போது லண்டனில் இருக்கிறேன் என்பதால் சென்னை செல்லும் வழியில் மும்பைக்கு வருவேன். அங்கு சுக்விந்தர் சிங் ஸ்டுடியோவில் நாம் இருவரும் சந்திக்கலாம் அங்கே தான் பாடல்களை உருவாக்குவேன் என்று கூறியிருக்கிறார். அங்கு சுக்விந்தர் சிங் தான் பாடலை உருவாக்கி இருந்ததை பார்த்து, என்ன செய்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். ரகுமான் ஒரு பாடலை உருவாக்க தன்னிடம் கொடுத்ததாக சுக்விந்தர் சிங் கூறியிருக்கிறார்.
இதனால் கோபமடைந்த சுபாஷ் கய், என் படத்திற்கு இசையமைக்க உங்களுக்கு தான் பல கோடி ரூபாயாக சம்பளமாக கொடுத்திருக்கிறேன். சுக்விந்தரை வைத்து எதற்கு இசை உருவாக்குகிறீர்கள், அதை, என் முன்பு கூற தைரியம் இருக்கிறதா, எனக்கு சுக்விந்தர் சிங் தான் வேண்டும் என்றால் நானே அவரை ஒப்பந்தம் செய்திருப்பேனே, என் பணத்தை வைத்து சுக்விந்தரை இசையமைக்க வைக்க நீங்கள் யார் என்று ரகுமானிடம் கத்தியிருக்கிறார்.
அதற்கு ஏ ஆர் ரகுமான், என் பெயருக்காக தான் பணம் கொடுக்கிறீர்கள், என் இசைக்கு அல்ல என்று கூறிவிட்டாராம். அதன்பின் அந்த பாடலை யுவராஜ் படத்திற்கு பதிலாக Slumdog Millionaire படத்திற்கு "ஜெய் ஹோ" பாடலை ஏ ஆர் ரகுமான் பயன்படுத்தி இருக்கிறார். கடைசியில் அப்பாடல் இரு ஆஸ்கர் விருதினை ஏ ஆர் ரகுமானுக்கு பெற்று கொடுத்திருக்கிறது.