5 நிமிஷத்துக்கு 3500 கொடுத்து ஓகே சொன்ன நடிகை நயன் தாரா!! ரகசியத்தை பகிந்த பிரபல இயக்குனர்..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர் நடிகை நயன் தாரா. தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நயன் தாரா, கிடைக்கும் நேரத்தில் தன் கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சினிமா நட்சத்திரங்கள் பலர் நயன் தாராவுடன் நடித்த அனுபவம் பணியாற்றி அனுபவம் போன்றவற்றைகளை பகிர்வது வழக்கம்.
அந்தவகையில் 2017ல் நடிகை நயன் தாரா நடிப்பில் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த அறம் படத்தினை இயக்கிய இயக்குனர் கோபி நயினார் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
மாவட்ட ஆட்சியராக நடித்த நயன் தாராவிற்கு இப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்திருந்தது. தற்போது 7 ஆண்டுகள் கழித்து கோபி நயினார் மனுஷி என்ற படத்தினை இயக்கி வருகிறார். முன்னணி நடிகர்கள் யாரும் தன்னை கண்டுகொள்வதில்லை.
சினிமாவில் நல்ல கதைகளை கொண்டு நல்ல படங்களை இயக்குபவர்களை ஹீரோக்கள் அழைத்து கதை கேட்பதில்லை என்றும் நடிகைகள் தான் வாய்ப்பு எனக்கு தருகிறார்கள். அப்படி அறம் படத்தின் கதையை நான் நயன் தாராவை சந்தித்து 5 நிமிடம் மட்டும் தான் சொன்னேன்.
உடனே அவர் அதற்கு சம்மதம் தெரிவித்து, பர்சில் இருந்த 3500 ரூபாய் எடுத்து கொடுத்து, கோபி சார் கோச்சிக்காதீங்க, என் பர்சில் இவ்வளவு தான் இருக்கிறது இதை அட்வான்சாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி மீதி கதையைக்கூட கேட்காமல் அப்படத்தில் நடித்து கொடுத்தார் நயன் தாரா என்று பூரிப்புடன் கூறியிருக்கிறார் இயக்குனர் கோபி நயினார்.