பிறந்து 60 நாளில் கார் கவிழ்ந்து மகளுக்கு விபத்து! அரந்தாங்கி நிஷாவால் கண்ணீர் விட்ட ரம்யா கிருஷ்ணன்..
தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த 4 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை ஒளிப்பரப்பாக்கி வருகிறது. வனிதா உள்ளிட்ட பலர் வெளியேறிய நிலையில் வரும் வாரம் இறுதி சுற்று நடைபெறவுள்ளது.
இறுதி போட்டியின் ஷூட்டிங் முடிந்து அதன் பிரமோ வீடியோக்கள் வெளியாகி வருகிறது. கடும் போட்டிகளோடு ஆரம்பித்து ஓவியா, சாக்ஷி அகர்வால், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அரந்தாங்கி நிஷா அழுது பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. பெண் குழந்தை பிறந்து 60 நாளில் விபத்தாகி கஷ்டத்தில் இருந்துள்ளார் அரந்தாங்கி நிஷா. இதை ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
அந்த விபத்து நடந்த போது ஆம்புலன்ஸ் வேகத்தில் வந்து உதவி அரந்தாங்கி நிஷாவின் மகளை மீட்டி காப்பாற்றியுள்ளார். நிறைய அழுதுட்டா இனி அழமாட்டா என கூறி ஆறுதலாக பேசிய அவருக்கு சீர் செய்துள்ளார். இந்நிகழ்வு அரங்கத்தில் இருந்த நடுவர்கள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுலை கண்ணீர் விட்டு அழவைத்துள்ளது.