திருமணமாகி 3 மாசத்தில் படுக்கையில் கீர்த்திக்கு இது பிடிக்கலையா!! அசோக் செல்வன் ஓப்பன் டாக்
சினிமாவில் பயணிக்கும் நடிகர்கள் நடிகைகள், தங்களுடன் பழகும் சக நட்சத்திரங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து ரியல் ஜோடிகளாகிவிடுவார்கள். அப்படி தான் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வன் நீண்டகாலமாக காதலித்து வந்த நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு முன்பே ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்து வந்த அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் செப்டம்பர் 13ல் தமிழ் கலாச்சாரத்தின் படி அவரது சொந்த ஊர் தோட்டத்தில் கல்யாணத்தை முடித்தனர். திருமணத்திற்கு பின் நடிப்பாரா கீர்த்தி பாண்டியன் என்ற கேள்வி எழ, குடும்பம் வேற தொழில் வேற என்று கூறி நடிப்பேன் என்று அவரே கூறினார். இந்நிலையில் இருவரும் திருமணத்திற்கு பின் நடிப்பில் மும்முரமாக நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில், கீர்த்தி பாண்டியன் நடிப்பில் கண்ணகி படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், அசோக் செல்வனின் சபா நாயகன் படம் அன்று வெளியாகவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் அளித்த பேட்டியொன்றில், திருமணத்திற்கு முன் ஒருவர் எப்படி இருக்கிறாரோ, அதை மாற்றிவிடுவேன் இதை மாற்றிவிடுவேன் என்று நினைத்தால் அது கட்டாயமாக பிரச்சனையில் தான் முடியும். திருமணத்திற்கு முன்பே அதை பற்றி பேசிக்கொள்வது சிறப்பு என்றும் தெரிவித்திருக்கிறார் கீர்த்தி பாண்டியன்.
தொடர்ந்து பேசிய அசோக் செல்வன், படுக்கையில் ஈரமான துண்டு, துணிகள், தேவையில்லாத பொருட்கள் கிடந்தால் அது கீர்த்திக்கு பிடிக்காது என்றும் நான், அழுக்கு துணிகள் இருந்தாலும் அதற்கிடையில் படுத்து கொள்ளக்கூடிய ஆள் என்றும் கூறினார். இது தான் கீர்த்தி பாண்டியனுக்கு பிடிக்காது. நாட்கள் செல்ல செல்ல அவருக்கு ஏற்ப தன்னை மாற்றி, சுத்தமாக வைத்துக்கொள்ள பழகிக்க்கொண்டதாகவும் அசோக் செல்வன் கூறியிருக்கிறார்.
பல விசயங்களை அவருக்காக தன்னை மாற்றியதாகவும் பகிர்ந்துள்ளார். திருமணமாகி 3 மாசத்தில் இப்படியொரு மாற்றமா? என்று கூறும் அளவிற்கு கீர்த்தி பாண்டியன் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட பயில்வான் உங்களுக்கு சண்டை படத்திலும் சண்டை போடுகிறீர்கள் என்று ஏடாகூடமாக கேள்வியை கேட்டதற்கு நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்து பார்த்தீங்களா என்று பதிலடி கொடுத்தார் கீர்த்தி பாண்டியன்.