ஆட்டோ ஓட்டாமலே மாதம் 5 முதல் 8 லட்சம் வருமானம்!! மாஸ் காட்டிய ஆட்டோ ஓட்டுநர்..
5 முதல் 8 லட்சம் வருமானம்
பெரும்பாலானோர் வேர்வை சிந்தி உழைத்தும் சரியான வருமானத்தை பெறாமல் இருப்பார்கள். ஆனால் ஒருசிலர், ஸ்மார்ட்-ஆக யோசித்தி வேலையே செய்யாமல் வருமானத்தை ஈட்டி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள். அப்படித்தான் மும்பையை சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒரு சம்பவத்தை செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அதாவது அமெரிக்க தூதரகத்திற்கும் வரும் விசா விண்ணப்பதாரர்கள், உள்ளே பைகளை கொண்டு செல்ல முடியாததால், அந்த பைகளை வைக்க ஏதாவது ஒரு இடத்தை தேடுவார்கள். அப்படி பிரபல நிறுவனமான லென்ஸ் கார்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராகுல் ரூபாணி அமெரிக்க தூதரகத்திற்கு சென்ற போது நடந்த ஒரு சம்பவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
மாஸ் காட்டிய ஆட்டோ ஓட்டுநர்
அதில், விசா விண்ணப்பிப்பதற்காக நான் அமெரிக்க தூதரகம் செல்ல வேண்டியிருந்தது. அப்போது பாதுகப்பு அதிகாரிகள் என் பையை உள்ளே கொண்டுப்போக அனுமதிக்கவில்லை.
என்ன செய்வது என்று யோசித்த போது அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பேக்கை என்னிடம் தாருங்கள், நான் பத்திரமாக வைத்திருக்கிறேன், ஆனால், 1000 ரூபாய் அதற்கான கட்டணம் என்றார். முதலில் நான் தயங்கியப்பின் நான் கொடுத்துவிட்டேன்.
பின் தெரிந்தது இது ஒரு அற்புதமான பிசினஸ். அந்த ஆட்டோ ஓட்டுநர் இதுபோன்று நாள் ஒன்றுக்கு 30 பேரின் உடைமைகளை பாதுகாத்து மாதம் ஒன்று 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக நினைக்கிறேன். அதுவும் ஆட்டோ ஓட்டாமலேயே அவர் நன்றாக சம்பாதிக்கிறார் என்று தெரிவித்துள்ளார் ராகுல்.