காதலிச்சேன், ஆனா 22 வயது தான் ஆகுது அதுக்குள்ள கல்யாணமா!! அதிர்ச்சியான பாக்யலட்சுமி சீரியல் இனியா..
சின்னத்திரை தொலைக்காட்சியில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான வாணி ராணி சீரியல் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து தற்போது பாக்யலட்சுமி சீரியலில் நடித்து மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் நடிகை நேஷா ராஜேஷ். வாணி ராணி, செல்வி, பிள்ளை நிலா உள்ளிட்ட பல சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நேஷா, தற்போது பாக்யலட்சுமி சீரியலில் இனியா ரோலிலும் லட்சுமி சீரியலில் அகிலாவாகவும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தான் அவரது பெற்றோருக்கு இரண்டாம் குழந்தை பிறந்துள்ளது. தன்னுடைய தங்கையின் 3வது பிறந்தநாளன்று கையில் ஏந்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், உங்களுக்கு எப்போது கல்யாணம் என்று தொகுப்பாளர் கேட்டிருக்கிறார். அதற்கு ஷாக்கான நேஷா, ஐய்யோ, நான் வளர்ந்துட்டேன்னு நினைக்கிறேன்.
இதுவரைக்கும் இப்படியொரு கேள்வி கேட்டதில்லை, அதனால் எனக்கு 22 வயசுதான் ஆகுது. எனக்கு தெரியவில்லை, 18 வயதில் நான் நினைத்தேன், 23 வயதில் கல்யாணம் 25 வயதில் குழந்தை என்று ஆசை இருந்தது. இப்போது இல்லை எதுவும் ஆகவில்லை என்று கூறியிருக்கிறார். நான் காதலிக்கவில்லை, யாருன்னா இருந்தா சொல்லுங்க.
காதல் இதற்கு முன் இருந்திருக்கு, இல்லைன்னு சொன்னா கமெண்ட்ல திட்டுவாங்க. ஆனால் மிகவும் மோசமான காதல் தான் அது. 22 வயசுல கூட ரிலேஷன்ஷிப்பில் இல்லாமல் யாராவது இருப்பாங்களா, இப்போது இல்லை. நான் யாருக்காகவும் இப்போது காதல் ஸ்டேட்டஸ் போடுவதில்லை. சில வீடியோக்கள் பார்க்கும் போது நம் வாழ்க்கைக்கு ஒத்துப்போகும், அப்படி தான் பகிர்வேன் என்று நேஷா கூறியிருக்கிறார்.