ஹீரோயினுடன் தனி ஓட்டலில் இயக்குனர் பாலா! கோபத்தில் சூர்யா

Suriya Krithi Shetty Bala
By Edward May 16, 2022 02:00 PM GMT
Edward

Edward

Report

சினிமாவை பொருத்தவரை படப்பிடிப்பு தாமதமாவதற்கு நடிகர் நடிகைகள் சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வராமல் போவது ஒரு காரணமாக இருக்கும். அதற்காக வெளியிடங்களில் ஷூட்டிங்கை வைக்கும் போது பக்கத்திலேயே நடிகர் நடிகைகளுக்கு ரூமை புக் செய்வார்கள் தயாரிப்பாளர்கள்.

அப்படி பாலா, சூர்யா கூட்டணியில் சூர்யா41 படம் கன்னியாக்குமரில் நடைபெற்று வருகிறது. கன்னியாக்குமர் கடற்கரையில் நடைபெறும் இந்த படத்திற்காக சூர்யாவுக்கு அருகில் இருக்கும் ஓட்டலில் ரூம் புக் செய்துள்ளனர். இதனால் சூர்யா சீக்கிரமாக படப்பிடிப்புக்கு வரமுடிகிறது.

ஆனால் இயக்குனர் பாலா, கதாநாயகி கீர்த்தி ஷெட்டி உட்பட சிலருக்கு மட்டும் கன்னியாக்குமரியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நாகர்கோவில் பக்கமாக ஒரு ஓட்டலில் ரூம் புக் செய்துள்ளனர்.

இதனால் படப்பிடிப்பு சீக்கிரமாக வருவதில் சிக்கலாகியுள்ளதாம். ஏன் ஹீரோவுக்கு மட்டும் தனியாக ரூம் புக் செய்துவிட்டு அவர்களுக்கு எவ்வளவு தொலைதூரத்தில் ரூம் புக் செய்தார்கள் என்று சூர்யா பாலா மீது கோபத்தில் இருந்து வருகிறாராம். ஏற்கனவே தன்னை பல மணிநேரம் ஓடவிட்டதால் வெறுப்பில் இருந்து வருகிறாராம்.