நம்ப வச்சு ஏமாத்திட்டாரு.. பிக்பாஸ் ரவிந்தரின் சுயரூபத்தை உடைத்த நடிகை பாலாஜி..
பிக்பாஸ் சீசன் 8
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ரவீந்தர் மற்றும் விவாகரத்து பிரச்சனையில் சிக்கிய அர்ணவ், கவுண்டம்பாளையம் படத்தை எடுத்து சர்ச்சையை கிளப்பிய ரஞ்சித் உள்ளிட்ட பல சர்ச்சை பிரபலங்களை பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்களாக கலமிறக்கி இருக்கிறார்கள் விஜய் டிவி.
இதுகுறித்து பலர் விமர்சித்து பேசி வரும் நிலையில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான பாலாஜி முருகதாஸ், ரவிந்தர் மீது குற்றம் சாட்டி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
அதில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை வைத்துக்கொண்டு ரவிந்தர் சொன்ன கதை என்னை வைத்து அவர் படமெடுக்கப்போவதாக அறிவித்த மார்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் படத்தின் கதைதான் நீங்க என்னோட 1.5 வருடத்தை வேஸ்ட் பண்ணீட்டீங்க.
ரவீந்தர்
இப்போது போட்டியாளர்களை உங்கள் அடிமைகளாக மாற்ற இப்படி உருட்டலாமா என்று பாலாஜி முருகதாஸ் ட்விட் போட்டுள்ளார். அந்த படத்தில் எனக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்தப்பின் அவரை காணோம். என்னை பொறுமையாக வெயிட் பண்ணச்சொல்லி ஒன்றரை வருடத்தை வீணாக்கினார்.
பின் பிக்பாஸ் முடித்துவிட்டு நான் ஹீரோவாக நடிக்க தாமதம் ஆனது. போன் பண்ணாலும் எடுக்கவில்லை, அலுவலகத்திற்கு சென்றாலும் ஆளக்காணோம். ஆனால் இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் தான் ஒரு பெரிய தயாரிப்பாளர் என்று தன்னிடம் கதை இருக்கிறது என்று கூறி அருணை பிரைன் வாஷ் செய்து வருவது அவரது போலித்தனத்தை காட்டுகிறது. என்னைப்போல் வேறு யாரும் ஏமாந்துவிட வேண்டாம் பாய்ஸ் என்றும் பாலா எச்சரித்துள்ளார்.