படப்பிடிப்பில் கோபத்தில் ஆடைகளை தூக்கி எறிந்த சூர்யாவின் தந்தை.. பிரபலம் கொடுத்த ஷாக்..
சிவக்குமார்
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் சிவக்குமார் நடிகராக மட்டுமில்லாமல் ஓவியராகவும் தன் திறமையை காட்டியவர். இவரது மகன்கள் தந்தை வழியில் தமிழ் சினிமாவில் சிறந்து விளங்கி வருகிறார்கள். சமீபத்தில் இயக்குநரும் தயாரிப்பாளருமான பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு அளித்த பேட்டியொன்றில், சிவக்குமார் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
பாலாஜி பிரபு அளித்த பேட்டி
தற்போது சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு மேடைப்பேச்சுக்கள் நிகழ்ச்சிகளில் சிவக்குமார் கலந்து கொண்டு வருகிறார். என் அப்பா 3 கிரைம் கதைகளை தொடர்ந்து செய்தார். காதல் ஜானரை மாற்றலாம் என்று காதல் கதையை இயக்க முடிவெடுத்து பெளர்ணமி அலைகள் படத்தினை உருவாக்கினார். அப்போது என் அப்பாவும் சிவக்குமாரும் தொடர்ந்து படங்கள் பண்ணினார்கள்.
பெளர்ணமி அலைகள் படத்தில் சிவக்குமார் நடிக்க ஒப்புக்கொண்டார். முதல் நாள் ஷூட்டிங் ஊட்டியில் தொடங்கியது. அப்போது சிந்து பைரவி படவிழா சென்னையில் நடந்ததில் அங்கு முதலமைச்சர் எம் எஜி ஆர் கலந்து கொண்டார்.
சிவக்குமாரும் அங்கு கலந்துக்கொள்ள வேண்டும் சூழல் ஏற்பட்டதால் ஒருநாள் கழித்து பெளர்ணமி அலைகள் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள தனது மேனேஜரை விட்டு என் அப்பாவிடம் அனுமதி கேட்டிருக்கிறார். அதற்கு அப்பா 6 மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்டது, நாளை முதல் ஷூட்டிங் நடக்கவில்லை என்றால் எல்லாமே சொதப்பிவிடும் என்று கூறிவிட்டார்.
ஊட்டி ஷூட்டிங்
மேனேஜர் சிவக்குமாரிடம் சொல்ல அவர் டென்ஷனாகி, வரிசையாக பணியாற்றுகிறோம். ஒருநாள் கூட அனுமதி தரமாட்டேங்கிறாரே என்ற கோபத்தில் சிவக்குமார், அப்பா அனுப்பிய ஊட்டி ரயில் டிக்கெட்டையும் மீண்டும் கொடுத்துவிட்டார். ரயில் டிக்கெட்டை மீண்டும் சிவக்குமார் கொடுத்ததால் ஷூட்டிங்கிற்கு வரமாட்டார் என்று அப்பா நினைத்துவிட்டார்.
இருந்தாலும் ஒரு நம்பிக்கையோடு தனது டீமோடு ஊட்டி சென்றார். முதல் நாள் ஷூட்டை அப்போதெல்லாம் ஹீரோவை வைத்துதான் எடுப்பார்கள். காலை 7 மணிக்கு ஷூட்டிங்கை ஆரம்பிப்பதற்கு அப்பா முடிவு செய்த நிலையில், சிவக்குமார் சரியாக 6.59 மணிக்கே ஊட்டிக்கு வந்துவிட்டார். காரில் இருந்து இறங்கியதும் அணிந்திருந்த ஆடையை கோபமாக அவிழ்த்தெறிந்துவிட்டு எங்கே உங்கள் கம்பெனி காஸ்ட்யூம் கொடுங்கள் என்று சொல்லி அதை போட்டுக்கொண்டர்.
எப்போதும் அப்பாவும் சூர்யா அப்பாவும் பேசிக்கொள்வார்கள். ஆனால் படம் முடியும்வரை இருவருமே பேசிக்கொள்ளவில்லை. அசிஸ்டெண்ட் வைத்துத்தான் பேசிக்கொண்டே படத்தை மொத்தமாக முடித்தார்கள். படத்தை முடித்துவிட்டு சொல்கிறேன் என்றதும் நான் படத்தை தியேட்டரிலேயே பார்க்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் என்று பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.