பிகினி போட்டதால் தான் நயன்தாராவுக்கு அது நடந்துச்சி!! நடிகரை சர்ச்சையாக பேச வைத்த பயில்வான்..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலுவுடன் பல நடிகர்கள் இணைந்து நடித்திருப்பார்கள். அப்படி அவருடன் பல படங்களில் நடித்து வந்தவர் நடிகர் பாவா லட்சுமணன். சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது மீண்டும் பழையநிலைக்கு வந்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் எடுத்துள்ள பேட்டியில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகர் பாவா லட்சுமணன். இன்னும் திருமணம் செய்யாததற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, எனக்கு கல்யாண ஆசை இல்லை, அம்மா முயற்சி செய்தார்கள்.
ஆனால் யாரும் சினிமாக்காரன் என்பதால் பொண்ணு தரவில்லை என்று கூறியிருக்கிறார். அப்போதுள்ள நடிகைகள் வறுமையில் வருகிறார்கள், அதனால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். ஆனால் இப்போதுள்ள நடிகைகள் பணக்கார பெண்கள் என்பதால் செருப்பால் அடித்துவிடுகிறார்கள்.
சினிமாவில் தமிழ் பெண்கள் நடிக்க வாராததற்கு காரணமே இந்த மாதிரியான தொந்தரவால் தான். அந்த காலத்தில் நடிப்பு திறமையை வைத்து படம் எடுத்தார்கள். இப்போது கதாநாயகிகள் எந்த ஆடை போடவும் தயாராக இருக்கிறார்கள் என்பது வளர்ச்சி தான்.
நயன்தாரா இந்தியில் ஜவான் படத்தில் லோக்கல் காஸ்டியூம் அணிந்து நடித்தார்கள். பில்லாவில் பிகினி ஆடையணிந்து தான் பெரிய நடிகையாகினார் என்று பாவா லட்சுமணன், பயில்வான் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
ஹீரோக்களுக்கு பிடித்திருந்தால் தான் நடிகைகளையே தேர்வு செய்கிறார்கள். அதேபோல் ஹீரோ என்ன சொல்கிறாரோ அதை தான் இயக்குனர்கள் செய்கிறார்கள்.