ஊர்வசியிடம் கேரவனில் குடிக்கு அடிமையாக காரணம் என்னணு கேட்டேன்!! பயில்வான் ரங்கநாதன்
நடிகை ஊர்வசி
தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்த நடிகை ஊர்வசி தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். நடிகை ஊர்வசியின் தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னுடைய 44வது வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பலரது கவனத்தை ஈர்த்தது.

முதல் திருமணம் விவாகரத்தில் முடிய, குடிப்பழக்கத்திற்கு அடிமையானதுதான் காரணம் என்று சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அதில், ஊர்வசியின் முதல் படமான முந்தானை முடிச்சு படத்தில் நானும் நடித்திருந்தேன். அப்போது கேரவனில் அவரை சந்தித்து பேசினேன். அதிகமாக குடிக்ககூடாது என்றும் எப்படி குடிப்பழக்கம் வந்தது என்ற கேள்வியும் கேட்டேன்.

குடிக்கு அடிமையாக காரணம்
அதற்கு ஊர்வசி, எனக்கு குடிப்பழக்கம் ஏற்படக் காரணம் தன் கணவர்தான் என்றும் அந்த வீட்டில் எல்லோரும் குடிப்பார்கள், அதனால் நான் மட்டும் ஏன் குடிக்கக்கூடது என்று தோன்றியதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் கணவர் வீட்டிலுள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவார்கள், என் வாழ்க்கையில் ஒருமன அமைதியில்லை, அதனால் நான் அதிகமாக மது அருந்த தொடங்கினேன்.

உடல்நலப் பிரச்சனைகள் இருந்தன. எனக்கு தூக்கம் வரவில்லை, என்னால் சாப்பிடமுடியவில்லை. என்னுடைய தனிப்பட்ட பணியாளர்கள், நண்பர்கள் எனக்கு அதிலிருந்து மீள உதவினர் என்று ஊர்வசி தன்னிடம் கூறியதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.