திருமணமாகாமல் குழந்தை பெற்றாரா பாக்யராஜ் மகள் சரண்யா!! கேள்விகளை எழுப்பிய பயில்வான்..
பாக்யராஜ் மகள் சரண்யா
சினிமாவில் வெளியாகும் திரைப்படங்கள் முதல் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக பேட்டிகளில் பேசி சர்ச்சைக்குள்ளாகி வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன். தற்போது பாக்யராஜ் மற்றும் அவரது மகள் சரண்யா பற்றி பேசியுள்ளார்.
பாக்யராஜ் மகள் சரண்யா எங்கும் தலைக்காட்டாமல் ஆடை அணிகலன் சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார். நான் ஒருமுறை தற்கொலை முயற்சி செய்தேன், நல்லவேளையாக கடைசி நேரத்தில் என் அம்மாவும் அப்பாவும் என்னை காப்பாற்றினார்கள்.
அதன்பின் சினிமாவில் தலைகாட்டாமல் சினிமாவிற்கு பின் அம்மா, அப்பாவுக்கு உதவியாக இருந்தேன். அம்மா, அப்பாவிடம் இருக்கும் அட்டாச்மெண்ட், எனக்கு என் தம்பி மீது இல்லை, எப்போதும் நாங்கள் சண்டைப் போட்டுக்கொண்டுதான் இருப்போம்.
திருமணமாகாமல் குழந்தை
சாந்தனு சிறு வயது முதல் நடித்து வந்தாலும் அவனுக்கு என்று பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படம் அமையாதது வருத்தமாக இருக்கிறது என்றும் நான் நடிக்கமாட்டேன் என்று நினைக்கிறார்கள் எனக்கு நல்ல ரோல் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன், சினிமாவாக இருந்தாலும் சரி, சீரியலாக இருந்தாலும் சரி நடிக்க தயார் என்று கூறியிருக்கிறார் சரண்யா.
மேலும் மகனை வளர்க்க சிரமப்படேன், குழந்தை பெற்றப்பின் தான், அப்பாவும் அம்மாவும் இப்படித்தானே நம்மை கஷ்டப்பட்டு வளர்த்திருப்பார்கள் என்று புரிந்துக்கொள்ள முடிந்தது. நான் செய்த தவறை யாரும் மன்னிக்க மாட்டார்கள், என்னாலும் மன்னிக்க முடியவில்லை என்று சொல்லி இருந்தார் சரண்யா.
பயில்வான்
தற்போது, அவர் என்ன தவறு செய்தார், அந்த குழந்தையின் தந்தை யார்? சரண்யா திருமணம் செய்தாரா? யாரை திருமணம் செய்தார் என்ற பல அடுக்கடுக்கான கேள்விகளை பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.