சரத்குமாரின் இரு மனைவிகளை ஒன்று சேர்த்த திருமணம்!! மகிழ்ச்சியில் மகள் வரலட்சுமி..
முன்னனி நடிகராக திகழ்ந்த நடிகை சரத்குமார், தன் மகள் வரலட்சுமியை போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த வரலட்சுமி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் வில்லியாகவும் நடித்து வந்தார். சமீபத்தில் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து வந்ததாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதக கூறி நிச்சயதார்த்தை முடித்தார்.
இந்நிலையில் நிக்கோலாய் - வரலட்சுமி திருமணம் இன்று பிரம்மாண்ட முறையில் நடைபெற்று வருகிறது. சில நாட்களாக மெஹெந்தி, சங்கீத் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. திருமணத்திற்கு முன்னணி நடிகர்கள் நடிகைகள், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்தனர் சரத்குமார் குடும்பத்தினர். நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
வரலட்சுமி திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதில், வரலட்சுமிக்கு 38 வயசு, நிக்கோலாய்க்கு 41 வயதாகிறது. மிகப்பெரிய வசதியானவர் தன் நிக்கோலாய். அப்பாவின் தொழிலை இப்போது அவர் செய்து வருகிறார்.
மேலும் பேசிய பயில்வான், சரத்குமார் முதல் மனைவியும் வரலட்சுமியின் அம்மாவுமான சாயா இந்த பக்கம், இரண்டாம் மனைவி ராதிகா இந்தப்பக்கம் என எந்தவித சங்கடமும் இல்லாமல் இருக்க்கிறார்கள். நிக்கோலாயின் முதல் மனைவியின் மகளும் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த திருமணம் உண்மையில் இரு குடும்பத்தையும் சேர்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.