தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து செய்யவில்லை!! குட் நியூஸ் சொன்ன பிரபல பத்திரிக்கையாளர்..
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று கொடிக்கட்டி பறக்கும் தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கடந்த ஆண்டு ஜனவி மாதம் ஆசையால் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கருத்து வேறுபாடு காரணமாக 18 ஆண்டுகளுக்கு பின் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இருவருக்கும் இடையில் என்னதான் பிரச்சனை என்று பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வந்தனர். ஆனால் நடிகர் தனுஷ் பெயர் குறிப்பிடப்படாத நடிகையுடன் கள்ளக்காதலில் இருந்து வந்ததாகவும் இந்த விசயம் மனைவி ஐஸ்வர்யா காதில் விழுந்து எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் தான் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இன்னொரு பெண்ணிற்காக மனைவியை பிரிந்துவிட்டார் என்ற தகவலை பாலிவுட் விமர்சகர் கூறியிருந்தார்.
ஆனால் இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் இன்று வரை சட்டரீதியாக விவாகரத்து செய்ய கோரி விண்ணப்பிக்கவில்லை என்றும் தனித்தனியாக வாழ்ந்து தான் வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் தனுஷ் - மீனாவை திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தி பற்றியும் கூறி ஷாக் கொடுத்தார். ஆனால் ரஜினிகாந்த் நெருங்கிய நண்பராக மீனாவுக்கு இருப்பதால் தனுஷை எப்படி திருமணம் செய்யவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐஸ்வர்யா அடிக்கடி, அனிரூத் ஸ்டுடியோவுக்கு சென்று தங்கியும் வருவதை ரஜினிகாந்த் கண்டித்தும் இருப்பதாக கூறியிருக்கிறார் பயில்வான்.