இலங்கை தமிழரை சேர்த்து மூன்று திருமணம் செய்த சீரியல் நடிகை! வெட்டவெளிச்சமாக்கிய பயில்வான்
சினிமாத்துறையை சேர்ந்த நடிகைகள் நடிகர்கள் உட்பட பல நட்சத்திரங்களின் அந்தரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து சர்ச்சையில் சிக்கி வருபவர் பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் இரவின் நிழல் ரேகா நாயரை வெளுத்து வாங்கி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
வம்பிழுத்த சர்மிளா
இதனை அடுத்து சீரியல் நடிகையும் மருத்துவருமான டாக்டர் சர்மிளாவை கண்டபடி பேசி அவரது தனிப்பட்ட வாழ்க்கை திருமணம் போன்றவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். அப்படி நடிகை சர்மிளா பத்திரிக்கையாளர் பிஸ்மியை வைத்து நேர்காணல் செய்து யூடியூப்பில் பகிர்ந்துள்ளார்.
அதில் பயில்வானை கண்டபடி திட்டியிருக்கிறார் சர்மிளா. இதற்கு பதிலடி கொடுத்த பயில்வான் 3 திருமணம் செய்த நீயெல்லாம் என்னை பற்றி பேசக்கூடாது என்று கூறியிருக்கிறார். மேலும் யார் யாரை திருமணம் செய்தார் 11 மணி நிகழ்ச்சியில் என்ன நடக்கும் என்றெல்லாம் கூறியுள்ளார்.
இலங்கை தமிழரும் கணவர்
டாக்டர் சர்மிளா 3 கல்யாணம் பண்ணியே அதை சொல்லட்டுமா என்று ஆரம்பித்து, டிவி சீரியலில் முதலில் நடிக்கும் போது சீரியல் தயாரிப்பாளர் எல் என் மோகனை கல்யாணம் பண்ணியா இல்லையா?. பிரபல கதை வசனக் கர்த்தாவாக இருந்த ஏ எல் நாராயணின் மகன் தான் எல் என் மோகன்.
அவருடைய தயவில் நடித்து கல்யாணம் செய்து பிரிந்தார். அதன்பின் இலங்கை தமிழர் ஒருவரையும் திருமணம் செய்து கொண்டு அவரையும் அனுப்பிவிட்டீங்க.
இப்போது சட்டமன்ற உறுப்பினருடன் வாழ்ந்து மனைவி அங்கீகாரத்தை பெற்றிருக்கீங்க என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.அந்தரங்க பற்றிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஏன் மற்றவங்க அந்தரத்தில் நீங்கள் மூக்கை நுழைக்கிறீங்க..