MLA-வுடன் ரேகா நாயருக்கு 2-வது திருமணம்? அதிர்ச்சி கொடுத்த பயில்வான்..
ரேகா நாயர்
சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்து வந்த நடிகை ரேகா நாயர், பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இதனைதொடர்ந்து பல சர்ச்சை பேச்சுக்களால் விமர்சிக்கப்பட்டு வந்த ரேகா நாயர் திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2-வது திருமணம்
அதில், ஏ எம் வி பிரபாகர் ராஜா, தமிழக சட்டமன்ற உறுப்பினராவார். இவர் 20211ல் தமிழக சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தெடுக்கப்பட்டார். கிறிஸ்தவரான பிரபாகர் ராஜா, இந்துக்கடவுளான முருகன் கடவுள் மேல் பக்தி கொண்டு வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று வந்துள்ளார்.
பின் கடவுளின் படத்தை வீட்டில் வைத்த போது அவருக்கும் மனைவிக்கும் இடையே சில சண்டைகள் ஏற்பட்டு குடும்பத்தில் விரிசலானது. அந்நேரத்தை பயன்படுத்தி உள்ளே நுழைந்தவர் தான் நடிகை ரேகா நாயர். பிரபாகர் ராஜாவுக்கு சொந்தமான உடற்பயிற்சி கூடத்தில் ரேகா நாயர் பயிற்சி செய்தபோது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறி வெளிநாடு பயணம் சென்று வந்தனர்.
அதன் காரணமாக மனைவியை விவாகரத்து செய்து ரேகா நாயரை அழைத்துக்கொண்டு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிரபாகர் ராஜா கலந்து கொண்டார். ரேகா தன் வாழ்க்கையில் வந்தப்பின் தான் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வந்ததாகவும் அவர் கூறி வருகிறார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சமீபத்தில் பிராபகர் ராஜா, புது வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தியுள்ளார். அந்நிகழ்ச்சியின் பத்திரிக்கை கூட இணையத்தில் பகிரப்பட்டும் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.