விஜய் வீட்டு பக்கம் பங்களா வாங்கிய திரிஷா, கீர்த்தி சுரேஷ்!! காரணமே இதுதான்.. பயில்வான்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், கோட் மற்றும் தளபதி69 படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறியிருந்தார். அரசியல் கட்சியை ஆரம்பித்தது முதல் இன்று வரை விஜய் பற்றிய பல மோசமான செய்திகள் தான் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அதிலும் நடிகை திரிஷாவுடன் காதல், திருமணம், அவருக்கு விஜய் நெக்லஸ், பங்களா போன்றவற்றை வாங்கி கொடுத்திருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். அதிலும் விஜய் பிறந்தநாளுக்கு நடிகை திரிஷா, அவருடன் லிஃப்ட்டில் எடுத்த புகைப்படத்தையும், கீர்த்தி சுரேஷ் அவருக்கு வாழ்த்து கூறி ஒரு பதிவையும் போட்டிருந்தார்கள்.
இதை வைத்து செய்திகள் மோசமாக விஜய்யை பேசி வருவது குறித்து பயில்வான் ரங்கநாதன் சில கருத்தினை கூறியிருக்கிறார்.
அதில், விஜய் பிறந்தநாளுக்கு கீர்த்தி சுரேஷ், திரிஷா வாழ்த்து சொன்னது தப்பா. தன்னுடன் கதாநாயகனாக நடித்த ஒரு நடிகருக்கு வாழ்த்து சொன்னது தப்பா. அதைவிட என்ன கொடுமை என்றால், கீர்த்தி சுரேஷ், திரிஷா விஜய் பங்களா பக்கத்தில் ஒரு பங்களா வாங்குனார்களாம். வாங்குனது விஜய் பங்களா என்பதற்கு அல்ல, அது பீச், கடற்கரை ஓரம்.
மாசில்லா காற்று வரும். நானே திருவான்மியூரில் இருக்கிறேன். நீலாங்கரையில் திரிஷா, கீர்த்தி சுரேஷ் வாங்கியது சுத்தமான காற்றுக்காக தான் விஜய்க்காக இல்லை. விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தார். இதைப்பிடிக்காத சில கட்சிகள் தான் மீடியாக்காரர்களை தூண்டிவிடுகிறார்கள்.
இதைதான் விஜய் சோசியல் மீடியாக்களை பற்றி அப்படி மேடையில் பேசியிருந்தார். இந்த அவதூறு எல்லாம் நீடிக்காது, ரஜினி, கமலைவிட விஜய்க்கு பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள், அவர்கள் இதை மதிக்கமாட்டார்கள் என்று விஜய்க்கு ஆதரவாக பயில்வான் பேசியிருக்கிறார்.
பொறுப்பு துறப்பு : குறித்த தகவலை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் சொன்ன கருத்தினை தான் செய்தியாக விடுப்பு தளத்தில் பகிர்ந்துள்ளோமே தவிர அவர் பேசியதற்கு விடுப்பு தளத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.