படவாய்ப்புக்காக சீரியலில் இருந்து விலகுகிறாரா? ராஜு எடுத்த அதிரடி..
பிக்பாஸ் 5 சீசனின் டைட்டில் வின்னராக கடந்த வாரம் ராஜு தட்டிச்சென்றார். ரசிகர்கள் எதிர்ப்பார்த்த மாதிரி ராஜு வின்னராகவும் பிரியங்கா ரன்னராகவும் வெற்றிப்பெற்றனர்.
நிகழ்ச்சி முடிந்து போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வேலைகளையும் நண்பர்கள் உறவினர்களுடன் வெளியில் சென்று வருவதுமாக இருந்து வருகிறார். சமீபத்தில் டைட்டில் வின்னர் ராஜு ஒரு படத்தின் விழாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு இணையதளத்திற்கு பேட்டிக்கொடுத்துள்ளார். நிகழ்ச்சி பற்றி கூறியதுடன் இனிமேல் சீரியலில் நடிப்பது பற்றி விளக்கியுள்ளார். நிகழ்ச்சி முடிந்து வந்ததும் படவாய்ப்புகள் நிறைய வருகிறது.
சீரியல் தான் எனக்கு ஒரு விஸ்டிங்க் கார்ட். அதிலிருந்து தான் இப்போது எனக்கு இந்த ஒரு வாய்ப்புகள் அமைவதால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் பிக்பாஸ் ராஜு.
இனி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தியாக நடிப்பாரா இல்லை அவருக்கு பதில் வேறொருவரை சீரியலில் நடிப்பாரா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
ஆனால், வேறொரு பேட்டியொன்றில் கதை எப்படி அமைகிறதோ அதற்கேற்ப நான் நடிக்க தயார் தான் என்று அந்த சீரியலில் நடிக்கும் காயத்ரியிடம் கூறியுள்ளார் ராஜு.