அப்படியொரு வார்த்தை கூறி அசிங்கப்படுத்திய இளம் நடிகர்!! நடிகை பானுப்ரியாவுக்கு இப்படியொரு நிலையா..
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த டாப் நடிகைகளில் ஒருவர் நடிகை பானுப்ரியா. தன்னுடைய காந்தக்கண்ணால் 90ஸ் கிட்ஸ்களை கவர்ந்தவர் தற்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கிறார். தனுஷின் 3 படத்தில் அவருக்கு அம்மாவா நடித்த பானுப்ரியா, கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்யராஜின் மனைவியாகவும், பொங்கல் அன்று வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் அம்மா ரோலில் சில காட்சியில் நடித்தார்.
சமீபத்தில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியொன்றில், சைதை தமிழரையாக பங்காளி படத்தில் நடித்த நடிப்பை எல்லாம் இப்போது இருக்கும் நடிகைகள் கனவுலும் நினைத்து பார்க்க முடியாது. சமீபத்தில் முன்பு போல் வசனங்களை நினைவில் வைத்து கொண்டு பேசமுடியவில்லை என்றும் மறதி நோய் ஏற்பட்டு இருப்பதால் சினிமாவில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டதாகவும் அவரே கூறியிருக்கிறார் என்று செய்யாறு பாலு தெரிவித்தார்.
மேலும், ஒரு படத்தில் நடிக்கும் போது வசனங்களை மறந்துவிட்டு தவித்ததாகவும், அந்த படத்தின் ஹீரோவுக்கும் தனக்கும் பல காமினேஷன் காட்சிகள் இருந்த நிலையில், ஒன்னு டயலாக்கை மாற்று, இல்லை நடிகையை மாற்று என்று அந்த இளம் நடிகர் அசிங்கப்படுத்தியதாக கூறி பானுப்ரியா அழுதிருக்கிறார்.
அந்த நடிகர் யார் என்று அவர் ரிவீல் செய்யாமல் தன்னுடைய பக்குவத்தை இப்படியொரு விசயத்திலும் விட்டுவிடவில்லை என்று செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார். மேலும், 80ஸ் ரீயூனியன் நிகழ்ச்சிகளில் கூட சக நடிகர்கள் தன்னை அழைக்காமல் இருப்பது கூட ரொம்பவே வருத்தமாக இருப்பதாகவும் பானுப்ரியா புலம்பியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.