அறிமுகப்படுத்திய நடிகையால் ஏற்பட்ட சறுக்கல்.. பாரதிராஜாவை இன்னும் எந்திரிக்கவே விடாமல் விழுந்த அடி..
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்ற பெயரோ பல கலைஞர்களை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. அவர் படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்றே 80களில் பலர் பட்டணத்திற்கு கிளம்பி வருவார்கள்.
அப்படி மிகப்பெரிய இயக்குனராக திகழ்ந்து வந்தார். அப்படி நடிப்பும் இயக்கமும் கலந்து சென்று கொண்டிருந்த பாரதிராஜா 2004ல் கண்களால் கைது செய் படத்தினை இயக்கி படுதோல்வியை சந்தித்தார்.

அப்படத்தில் கதாநாயகனாக வசீகரன் அறிமுக நடிகையாக பிரியாமணியை நடிக்க வைத்திருந்தார். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையும் மையான இருந்தும் படம் தோல்வியை சந்தித்தது.
இந்த படத்திற்கு பின் கடைசியாக அறிமுகப்படுத்திய நடிகை பிரியாமணியை கதாநாயகியாக போட்டு தோல்வியை கண்டு அதிலிருந்து இன்னும் எந்திரிக்க முடியவில்லை. இப்படத்தை அடுத்து ஓரிரு படங்களை இயக்கியும் சரியான வரவேற்பு பெறாமல் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் பாரதிராஜா.
