மாயாவுக்காக பலி கொடுக்கப்பட்ட போட்டியாளர்!! பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியது இவர் தான்..
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது 97 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கடைசி வரை ஈடு கொடுத்த பூர்ணிமா, பிக்பாஸ் வைத்த 16 லட்சம் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறினார். புத்திசாலித்தனமான முடிவு என்று அவரை அப்படி அழைத்தாலும் ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வாரம் இரட்டை எலிமினேட் என்று கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் குறைவான வாக்குக்களை பெற்ற விசித்ரா இந்த வாரம் கமல் ஹாசனால் வெளியேற்றப்பட்டு விட்டார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
97 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த விசித்ரா ரசிகர்கள் கொஞ்சம் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது கோபத்தில் இருந்து வருகிறார்கள். அதற்கு காரணம் வாரம் வாரம் மாயாவை காப்பாற்ற வேறொரு போட்டியாளர்களை பலிக்கொடுக்கிறார்கள் என்பது தான்.
மாயாவை காப்பாற்ற விசித்ராவை இந்த வாரம் பலிக்கொடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.