நிக்ஷனுடன் அப்படி பண்ணது தப்பு தான்.. வாயில ஆணி அடிக்கிற அளவுக்கு கோபத்தின் உச்சிக்கே சென்ற பிக்பாஸ் 7 ஐஸு..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்துடனும் நேரத்தை செலவிட்டும் பேட்டிகளை கொடுத்து வருகிறார்கள். நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது முதல் எந்த ஒரு பேட்டிகளிலும் கலந்து கொள்ளாத ஐஸு, சமீப நாட்களாக பிக்பாஸ் அனுபவங்களை பேட்டிக்கொடுத்து பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பிக்பாஸ் Finale-க்கு ஏன் வரவில்லை என்ற காரணத்தை கூறியிருக்கிறார்.
கேள்வி கேட்டதும் என்ன சொல்றது என்று முழித்த ஐஸு, அதன்பின் காரணம் என்ன என்று தெரிவித்துள்ளார். உடல் அளவிலும் மனதளவில் சரியில்லாமல் இருந்தேன் அதனால் தான் வரவில்லை என்று தெரிவித்தார். மேலும், யூடியூப்பர்களை பார்க்கும் போது கழுத்த நெறித்து வாயில் ஆணி அடிக்கிற அளவுக்கு கோபம் வருகிறது, ஆனால் அதை நான் பண்ண மாட்டேன்.
ஒரு விசயத்தை பெரிசாக காட்டுவது விமர்சகர்கள் தான். என்னோட லெட்டரிலும் விமர்சகர்களை பற்றி பேசியிருந்தேன். அவர்களும் என்னை பற்றி பெரியளவில் எதிர்ப்பார்த்தார்கள். அதன்பின் என் தப்பால், அதனால் அவர்கள் அதை செய்தார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் ஐஸு - நிக்ஷன் பெரியளவில் பேசப்படுவதற்கு என்ன காரணம், என்ன முற்றுப்புள்ளி வைக்கிறீர்கள்.
வெளியில் வந்ததும் தான் இப்படி இந்த விசயம் பெரிதாக வெடித்திருப்பது எனக்கு தெரிந்தது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதும், வெளியில் வந்ததும், அது தேவையற்றதாக உணர்கிறேன். நிக்ஷனுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. திறமையானவர், நன்றாக வரவேண்டும். வேண்டும் என்றே அவர் விளையாட்டை நான் கெடுக்கவில்லை. ஆனால் மறைமுகமாக பல விளைவுகளை ஏற்படுத்தியது. இனிமேலும் அது நடக்காது என்று அதற்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கிறேன்.
அர்ச்சனாவிடம் கத்தி பேசியது எனக்கு வெளியில் வந்து பார்த்ததும் பிடிக்கவில்லை. நான் அப்படி பேசி இருக்க கூடாது, அமைதியாக பேசி இருந்திருக்க வேண்டும். 10 பேர் சேர்ந்து அர்ச்சனைவை கொடுமைப்படுத்தவில்லை. எங்களுடைய சண்டை, மாறுப்பட்ட கருத்துக்கள் தான் வேறெதுவும் இல்லை என்று ஐஸு தெரிவித்துள்ளார்.