பிக் பாஸ் சௌந்தர்யாவின் முன்னாள் காதலன்.. மண்டையில் பாட்டில் வைத்து அடித்த சம்பவம்
பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சௌந்தர்யா நஞ்சுண்டன். இவருடைய குரல் பற்றி பலரும் கிண்டல் செய்தனர். ஆனால், அதையெல்லாம் சௌந்தர்யா கண்டுக்கவே இல்லை.
இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட்டார். இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சௌந்தர்யா மற்ற போட்டியாளர்களிடம் தனது முன்னாள் காதலன் குறித்து பேசியுள்ளார். 11ஆம் வகுப்பு படிக்கும் போது காதலிக்க துவங்கினாராம்.
கல்லூரி வரை இருவரும் காதலித்து வந்துள்ளனர். கல்லூரி படித்து வந்த நேரத்தில் தான் சௌந்தர்யா மாடலின் துறையில் என்ட்ரி ஆக ஆரம்பித்துள்ளார். ஆனால் சௌந்தர்யா மாடலினில் வருவது அவருடைய காதலருக்கு பிடிக்கவில்லையாம்.
இதனால் தனது காதலருக்கு தெரியாமல் மாடலின் போட்டோஷூட் புகைப்படங்களை போனில் ஹைட் பண்ணி வைத்திருப்பாராம். அதை அவருடைய காதலர் ஒரு முறை பார்த்துவிட்டாராம். அப்போது நடு ரோட்டில் சௌந்தர்யாவை அடித்ததாக கூறியுள்ளார்.
மேலும் இதே போல் பல முறை தன்னை அடித்ததாக சௌந்தர்யா தெரிவித்துள்ளார். அப்படி தான் ஒரு முறை சாஸ் பாட்டில் வைத்து தலையில் அடித்தாராம். இப்படி நடந்துகொண்டே இருந்த நிலையில், தனக்கு தன்னுடைய கேரியர் முக்கியம் என முடிவு செய்து இருவரும் பிரிந்துவிட்டோம் என சௌந்தர்யா கூறியுள்ளார். இவர் பேசிய இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.