திருமணமான ஒரு வருடத்தில் பினாயில் குடித்த பிக்பாஸ் நடிகை! தற்கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?

actress suicide biggboss Chaitra
By Kanagasooriyam Apr 11, 2021 06:50 PM GMT
Kanagasooriyam

Kanagasooriyam

Report

சமீபகாலமாக சினிமா பிரபலங்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு முதலே பல பிரபலங்கள் தற்கொலை செய்து மரணமடைந்தனர். இதைதொடர்ந்து கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சைத்ரா தற்கொலை முயற்சி செய்து கொண்ட கன்னட சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடத ஆண்டு நாகர்ஜுன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட சைத்ரா இருவரும் சேர்ந்து வாழவில்லை என்றும், விவாகரத்து செய்யப்போவதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். மன ரீதியாக பாதித்த நடிகை சைத்ரா பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து சைத்ராவின் தந்தை கூறியது, சில நாட்களாக சைத்ரா மன உளைச்சலில் இருந்து வந்தார், தற்போது ஆபத்து இல்லை.

விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவார் என்று கூறியுள்ளார். மேலும், கணவர் நாகர்ஜூனிற்கும் சைத்ராவிற்கு என்ன பிரச்சனை என்று அவர் தரப்பில் எதுவும் கூறப்படவில்லை. க்கலைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக நேற்று ஏ.சி.பி அலுவலகத்திற்கு நாங்கள் செல்லவிருந்தோம். ஆனால், சைத்ரா இப்படியோரு முடிவை எடுத்ததால், எங்களால் போக முடியவில்லை என்று கூறியுள்ளார் சைத்ராவின் தந்தை.