பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கணவரை சந்திக்காத பிரியங்கா! என்ன தான் ஆச்சு!
பிக்பாஸ் 5 சீசன் முடிந்து ராஜு வின்னராகவும் பிரியங்கா ரன்னராகவும் வெற்றி பெற்றனர். தற்போது போட்டியாளர்களுடன் இணைந்து பலர் பார்ட்டிகளிலும் அவுட்டிங்கும் சென்று வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் பிரியங்கா வீட்டிற்கு சென்று நேற்று முதன்முதலாக யூடியூப் மூலம் ரசிகர்களிடம் பேசினார். என் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்களை நான் சந்தித்து இருக்கிறேன்.
அதை எப்படியாவது கடந்து போக வேண்டும் என்று நினைத்து ஓடிக்கொண்டே இருப்பேன். நான் நேசிக்கும் வேலை மட்டும் தான், என்னை சந்தோஷப்படுத்தியது.
எந்த ஒரு கஷ்டத்தையும் என் மூளைக்குள் செல்லாமல் பார்த்துக்கொண்டது என் வேலை என்று மனம் திறந்து பேசியுள்ளார். ஆனால் வீட்டினை விட்டு வெளியேறிய பிரியங்கா இன்னும் கணவரை சந்திக்காமல் இருந்து வருகிறார்.
ஏற்கனவே பிரியங்காவிற்கு அவரது கணவர் பிரவீன் குமாருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாலும் அதற்கான சில காரணங்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வைரலானது.
தற்போது பிக்பாஸ் நண்பர்களை சந்தித்து வந்த பிரியங்கா கணவரை சந்திக்காது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.