மன உளைச்சலுக்கு ஆளாகி கத்தி கதறியக் இலங்கை பெண்.. பிக்பாஸ் 6 ஏற்பட்ட சலசலப்பு..

Bigg Boss Janany
By Edward Nov 11, 2022 07:40 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 6 தற்போது 33 வது நாட்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இந்த வாரம் யார் வெளியேறிவார் என்று ரசிகர்கள் யூகித்து வருகிறார்.

அப்படி கடந்த வாரம் கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் பல போட்டியாளர்களிடையே கடுமையாக வாக்குவாதமும் சண்டையும் எழுந்துள்ளது. நேற்று ஏடிகேவுக்கும் ஜனனிக்கும் ஏற்பட்ட பாசப்போராட்டத்தில் ஏடிகே அழுதும் இருக்கிறார்.

இன்றைய இரண்டாம் பிரமோ வீடியோவில் சிறப்பாக பங்கு கொள்ளாத போட்டியாளர் என்ற டாஸ்க்கில், விக்ரமன் ஜனனியின் பெயரை கூற, மேலும் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

இதனை தாங்க முடியாத ஜனனி கத்தி கதறி அழுதிருக்கிறார். சக போட்டியாளர்கள் ஜனனியை சமாதானப்படுத்த என்ன நடந்தது ஏன் இப்படி அழுகிறார் ஜனனி என்று ரசிகர்கள் கேள்வி கேட்டும் வருகிறார்.

மேலும் சிலர் ஓவர் ஆக்டிங் என்றும் கிரிஜ் என்றும் கிண்டல் செய்து ஜனனியை கலாய்த்து வருகிறார்கள்.