தாமரைச்செல்வியின் வீடு இதுதானா? பிக்பாஸ் சம்பளம் வீடு கட்டவே பத்தாதே?
பிக்பாஸ் 5 சீசன் தற்போது 99வது நாட்கள் சென்று இறுதி வாரத்தில் காலெடி எடுத்து வைத்துள்ளது. பிரியங்கா, ராஜு, நிரூப், அமீர், பாவ்னி ஆகிய ஐந்து பேரும் இறுதி போட்டிக்கு விளையாடி வருகிறார்கள். நேற்று யாரும் எதிர்ப்பாராத விதமாக தாமரைச்செல்வி பிக்பாஸ் வீட்டினை விட்டு வெளியேறினார்.
கமல்ஹாசனுடன் பேசிவிட்டு வீடு திரும்பிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் பிக்பாஸ் தாமரை வெளியேறியது குறித்து அவரது அம்மா மற்றும் அக்கா பேட்டியளித்துள்ளனர். பல கஷ்டங்களை கண்டுவந்த என் மகள் தாமரை சிறுவயதில் இருந்தே நன்றாக ஆடுவாள்.
படிப்பை நிறுத்திவிட்டு நாடகத்தில் ஆடும் ஆசையை நிறைவேற்றினாள். அப்படி ஆடி சம்பளம் பெற்று தான் இந்த வீட்டினை கட்டினால் என்று கூறியுள்ளார். மேலும் அவரது அக்கா கூறுகையில், தாமரை படிக்காத பெண் எப்படி போட்டி போடமுடியும் என்று கவலையில் இருந்தேன். ஆனால் நன்றாக ஆடினால். அவள் வெளியேறியது எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

