யோக்கிய சிகாமணி கிடையாது.. இமான் பத்தி கேட்கக்கூடாதுன்னு கண்டீசன் போட்ட சிவகார்த்திகேயன்.. பிஸ்மி..
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. அப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக சிவகார்த்திகேயன் பேட்டியளித்து வருகிறார்.
அவர் கொடுக்கும் பேட்டியில் அயலான் படத்தை மட்டுமே பேசி வருவதாகவும் இமான் பிரச்சனை குறித்த கேள்விகள் கேட்கப்படாமல் இருப்பது குறித்து சினிமா விமர்சகர் பிஸ்மி பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
இமான் பேசியது எல்லாம் பொய்யோ என்று சிவகார்த்திகேயன் பேட்டியை பார்க்கும் மக்களுக்கு தோன்றும். உண்மை என்னவென்றால் சிவகார்த்திகேயனை பேட்டி எடுக்க அழைப்பு விடுக்கிறார்களோ அவர்களிடம், அயலான் படத்தை மட்டும் தான் கேள்வி கேட்க வேண்டும். மற்ற எதையும் கேட்கக்கூடாது என்று கண்டீசன் போட்டு சத்தியமும் வாங்குகிறார்கள்.
அதன்பின் தான் பேட்டி எடுக்க கூப்பிடுகிறார்கள். இதனால் தான் அவர்களால் அதை கேட்கமுடியவில்லை என்றும் ஏற்கனவே பல கண்டீசன்களை போட்டதாலும் அவர்களால் கேட்க முடியாமல் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர்கள் கேட்காததனால் அந்த சம்பவங்கள் எல்லாம் பொய் என்றோ! சிவகார்த்திகேயன் யோக்கிய சிகாமணி என்றோ அர்த்தம் கிடையாது என்றும் தெரிவித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் அட்லீ புகழ் பாட காரணம், பாலிவுட் வரை சென்றதால் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் தான்.
You May Like This Video