ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினிகாந்த் விவகாரம்!! கூலிப்படையை வைத்து விஜய் தான் பரப்பினார்!! பிரபலம் ஓப்பன் டாக்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ரம்பா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல சுவாரஸ்யமான விசயங்களை பகிந்து கொண்டார். அதில், அருணாச்சலம் படத்தின் ஒரு நாள் படப்பிடிப்பில் இருட்டாக இருந்தது. அப்போது யாரோ முதுகில் என்னை தட்ட அங்கையே கத்தி விட்டேன்.
பிறகு தான் தெரிந்தது, அது ரஜினி சார் என்று, பிறகு எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம் என்று கூறினார். ஆனால், சிலர் இதை எதோ ரஜினி ரம்பாவிற்கு தொல்லை கொடுத்தார் என்பது போல் தவறாக சித்தரித்து பரப்பி வந்துள்ளனர். இதை நடிகர் விஜய்யின் கூலிப்படையினர் தான் பரப்பியுள்ளதாக சினிமா விமர்சகர் பிஸ்மி தெரிவித்திருக்கிறது.
அவரது யூடியூப் சேனலில் இந்த விசயம் பற்றிய பேசியிருக்கிறார் பிஸ்மி. கடந்த 4 ஆம் தேதி ரஜினிகாந்திற்கு ஒரு நரகமாக தான் இருந்திருக்கும். ரம்பா பேட்டியில் ரஜினிகாந்தை பற்றி அருணாச்சலம் படத்தினை பற்றி பகிர்ந்திருந்தார். பாலிவுட் நடிகரை மட்டும் கட்டிப்பிடிக்கிறீர்கள் என்று கூறியது முதல் இருட்டில் முதுகில் தட்டியது வரை விஜய் ரசிகர்கள் டிரெண்ட்டிங் கொண்டு வந்தார்கள்.
இதற்கு ரஜினி - விஜய் ரசிகர்கள் மாறிமாறி இணையத்தில் ஹேஷ்டேக்கினை வைரலாக்கி வந்தனர். ரஜினி ரசிகர்கள் #காமவெறிப்பிடித்தவிஜய் என்று வைரலாக்கினார்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் என்றால், இதையெல்லாம் செய்தது ரசிகர்கள் கிடையாது, இணையக் கூலிப்படைகள் தான் ஐடி விங்.
ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினிகாந்த் என்ற ஹாஷ்டேக்கை கூட விஜய் ஐடி விங், காமவெறிப்பிடித்த ரஜினி என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தது ரஜினி ஐடி விங் குழு தான் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த விசயம் கூட ரஜினிகாந்த் மிகப்பெரியளவில் கவலைப்பட்டு இருப்பார் என்றும் பேரன் பேத்தி இருக்கும் இந்த வயதில் இப்படியொரு செய்தி அவரையும் அவரது குடும்பத்தையும் பாதிக்கப்பட்டு இருப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார் பிஸ்மி.