மருத்துவமனைக்கு ரஜினி குடும்பம் பில் கட்டவில்லையா? வெளுத்து வாங்கி பேசிய பிரபலம்..
வேட்டையன்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். த.செ. ஞானவேல் இயக்கத்தில் அனிருத் இசையில் இப்படம் உருவாகி இன்று அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியர் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வேட்டையன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தினை தொடரவுள்ளார்.
ரத்த நாளத்தில் வீக்கம்
ஏற்கனவே படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துள்ள நிலையில் வேட்டையன் படம் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்திற்கு, அடிவயிற்றில் உள்ள ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்ட காரணத்தால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் சரியாகிவிட்டதை அடுத்து மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டார்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டியில், அப்போலோ மருத்துவமனையில் ரஜினி பெற்ற சிகிச்சைக்கு அவரது குடும்பத்தினர் பில் கட்டவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். அதெல்லாம் தேவையில்லாத ஒன்று, சுத்தப்பொய்.
முக்கியமாக பில் கட்டப்பட்டதா? இல்லையா என்பது மருத்துவமனை நிர்வாகத்துக்கும் ரஜினி குடும்பத்துக்கும் மட்டும்தான் தெரியும். அதேபோல் வேட்டையன் படத்தின் ப்ரமோஷனுக்காகத்தான் அவர் மருத்துவனையில் இருக்கிறார் என்றெல்லாம் மனசாட்டி இல்லாதவர்கள் கூறினார்கள். இப்படியெல்லாம் சொல்லக்கூடாது, ரொம்ப தவறு. இவர்கள் என்ன பெரிய புலனாய்வு புலிகளா? என்று சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார் பிஸ்மி..